Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா எடுப்பதாகக் கூறி சொத்துக்களை ஆட்டயப் போட்ட இயக்குநர்... கஞ்சா கருப்பு போலீசில் புகார்
சிவகங்கை: சினிமா எடுப்பதாகக் கூறி தன் சொத்துக்களை அபகரித்த இயக்குநர் கோபியிடமிருந்து அவற்றை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கை மாவட்ட போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை நகரைச் சேர்ந்தவர். இவர் நேற்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துரையைச் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், "கடந்த ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படமாக்கினர். இந்த படத்தின் இயக்குநராக கோபியும், நிர்வாக இயக்குனராக காளையப்பன் என்பவரும் இருந்தனர். பணம் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றுவிட்டது.
இதனால் இயக்குனர் கோபி, காளையப்பன் ஆகிய 2 பேரும் பணத்திற்காக என்னுடனும், என் மனைவி சங்கீதா, மைத்துனர் சந்தோஷ்குமார் ஆகியோருடனும் பேசினர். அதன்பின்னர் எங்களுக்கு சொந்தமான சிவகங்கையை அடுத்த கட்டாணிபட்டியில் உள்ள இடத்தையும், மதகுபட்டி, மேலூரில் உள்ள 6 சொத்துக்களையும் வங்கியில் அடமானமாக வைத்து ரூ.30 லட்சம் வரை கடன் பெற்றனர்.
அந்த பணத்தைக் கொண்டு படத்தை எடுத்து முடித்தனர். அவர்கள் சொத்துக்களை எங்களிடம் இருந்து பெறும்போது என் மனைவி சங்கீதாவிடம் படம் வெளியானவுடன் பணத்தை கொடுத்து சொத்துக்களை மீட்டுக் கொடுப்பதாக எழுதிக் கொடுத்திருந்தனர்.
ஆனால் படம் வெளியான பின்னர் பேசியபடி அவர்கள் சொத்துக்களை மீட்டுத் தரவில்லை. தற்போது என்னுடைய சொத்துக்களை காளையப்பன், கோபி ஆகியோர் வாங்கி வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்றனர். எனவே அவற்றை மீட்டுத் தர வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு டிஎஸ்பி தலையிலான படை இந்த புகாரை விசாரிக்கவிருக்கிறது.