Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை கவ்ஹர் தான் பணம் கொடுத்து அவரை அறையச் சொன்னார்: மாலிக் பேட்டி
மும்பை: பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் பணம் கொடுத்து தன்னை அறையுமாறு கூறியதாக அவரை அறைந்து கைதான அகில் மாலிக் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் சல்மான் கான் நடத்திய பிக் பாக்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி அவர் மும்பையில் நடந்த டிவி நிகழ்ச்சி ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்களில் ஒருவரான முகமது அகில் மாலிக் என்பவர் கவ்ஹர் முஸ்லீமாக இருந்து கொண்டு அரைகுறை ஆடையில் நடனம் ஆடுவதாகக் கூறி அவரின் கன்னத்தில் அறைந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் மாலிக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கவ்ஹர்
நான் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட். பல நாட்களாக வேலை தேடி அலைந்தேன். அப்போது தான் கவ்ஹர் கான் தன்னை அறையுமாறு கூறி எனக்கு பணம் கொடுத்தார். மேலும் அவரை அறைந்தால் தபாங் 3 படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதியளித்தார். அதனால் தான் அவரை அறைந்தேன் என்று மாலிக் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
போலீஸ்
நான் அறைந்தால் அது குறித்து போலீசில் புகார் அளிக்க மாட்டேன் என்று கவ்ஹர் எனக்கு வாக்குறுதி அளித்தார் என்று மாலிக் தெரிவித்துள்ளார்.
பேட்டி வேறு
என் மீது அன்பு வைத்து ஆதரவு அளித்துள்ள என் குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்கள், மீடியா, சினிமா துறையினருக்கு நன்றி. நான் காயம் அடைந்தேன். ஆனால் அதனால் நொந்துவிடவில்லை. அதிர்ச்சி அடைந்தேன் ஆனால் இன்னும் உறுதியோடு உள்ளேன். முன்பை விட தற்போது வலிமையாக உணர்கிறேன். அந்த ஆள் அமைதியை போதிக்கும் என் அழகிய மதத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது என்று அறை வாங்கிய பிறகு கவ்ஹர் அளித்த பேட்டி தான் இது.
பப்ளிசிட்டி
பாலிவுட்டில் வாய்ப்புகள் பெற கஷ்டப்படும் கவ்ஹர் கான் விளம்பரத்திற்காக பணம் கொடுத்து தன்னை தாக்க வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!