Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
4 ஹீரோக்களுடன் புதிய படத்தைத் தொடங்கும் கவுதம் மேனன்?
சென்னை: கவுதம் மேனன் அடுத்ததாக 4 ஹீரோக்கள் நடிக்கும் படத்தை தொடங்கப் போவதாக கூறப்படுகிறது.
'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குப் பின் தனுஷ்-மேகா ஆகாஷை வைத்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வை கவுதம் மேனன் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் கவுதம் மேனன் அடுத்ததாக பிருத்விராஜ்(மலையாளம்), சாய் தரண்தேஜ்(தெலுங்கு), புனித் ராஜ்குமார்(கன்னடம்) ஆகியோரை வைத்து ஒரு படத்தை எடுக்கப் போகிறாராம்.
தமிழில் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். முன்பு சிம்புவை வைத்து இப்படத்தை கவுதம் எடுப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் எபெக்டால் சிம்புவிற்குப் பதில் வேறு ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க, கவுதம் மேனன் முயற்சித்து வருகிறாராம்.
ஹீரோயினாக அனுஷ்கா, தமன்னா இருவரையும் ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். இன்னும் ஒரு ஹீரோயின் மற்றும் தமிழ் ஹீரோ மட்டும்தான் பாக்கி என்கிறார்கள்.
படத்திற்கு 'ஒன்றாக' என்று தலைப்பு வைத்திருப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் படத்தை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் ஹீரோ தேர்வு முடிந்தவுடன் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.