Don't Miss!
- News முருகனை அடுத்து மாரியம்மன் வழிபாட்டில் வள்ளிக் கும்மி… காரணம் என்ன?
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நடிகை நர்கீஸ் பிறந்த நாள்.. கொண்டாடும் கூகுள் டூடுல்!
இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளுள் ஒருவராகக் கொண்டாடப்படும் நர்கீஸின் பிறந்த நாளை இன்று டூடுலில் வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள்.
'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்தி நடிகை, முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான 'மதர் இந்தியா' வில் நடித்தவர், என ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நர்கீஸ்.
86வது பிறந்த நாள்
இன்று அவருக்கு 86வது பிறந்த நாளாகும். இந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் தனது டூடுல் சேவைக்கான இடத்தில் நர்கீசின் அழகிய புகைப்படம் ஒன்றை வைத்து திரைத்துறையில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளது.
தமன்னாவில் அறிமுகம்
1929-ம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பிறந்தவர் நர்கீஸ் தத். 1935 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர், கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் தமன்னா.
சுனில் தத்
1957-ல் மதர் இந்தியாவில் நடித்தபோது, உடன் நடித்த சுனில் தத்தை காதலித்து மணந்தார். அதன் பிறகு படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். சஞ்சய் தத், நம்ரதா தத், ப்ரியா தத் என மூன்று குழந்தைகளைப் பெற்றார்.
தேசிய விருது
திருமணத்திற்குப் பிறகு அரிதாகவே நடித்தார். அப்படி நடித்து வெளிவந்த 'ராத் ஆர் தின்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார் நர்கீஸ்.
கணையப் புற்று நோய்
தன் இறுதிக்காலத்தில் கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981-ஆம் ஆண்டு மே 3-ம் தேதி மரணமடைந்தார். இந்திய அரசாங்கம் இவரது பெயரில் "சிறந்த தேச ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை வழங்கி வருகிறது.