Don't Miss!
- News பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எங்கள் பிரிவுக்கு ஸ்ருதி- அக்ஷரா காரணமல்ல!- கௌதமி
கமல் ஹாஸனை விட்டு நான் பிரிந்ததற்கு ஸ்ருதியோ, அக்ஷராவோ காரணமல்ல என்று கூறியுள்ளார் நடிகை கௌதமி.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், "எங்களிடையே நிகழ்ந்து இருக்கும் இந்த பிரிவு குறித்து நாங்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருந்திருக்கலாம். ஆனால் நான் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண். பொது வாழ்க்கை என்றால் எல்லாம் பொதுவானதுதான். எதையும் மறைத்து எத்தனை நாளுக்கு வாழ முடியும். என் வாழ்க்கை மாற்றங்கள் குறித்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. 16 வயதில் சினிமாவுக்கு வந்தேன். சுய சிந்தனையில் இவ்வளவு உயரம் தொட்டேன். இப்போது என் மகளுக்காக நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. அதனால் பிரிகிறேன். மாற்றத்துக்காக எல்லோரும் மன உளைச்சலை சந்தித்துதான் ஆக வேண்டும்.
இனி மகளின் எதிர்காலம் பற்றித்தான் யோசிப்பேன். இது பற்றி விரிவாக பேச முடியாது.
ஷ்ருதி ஹாசன், அக்ஷரா இடம் வேறு. என் இடம் வேறு. அவர்களை எதிர்க்க நான் யார்? எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து இருக்கிறேன். பக்க பலமாகவும் இருந்து வந்திருக்கிறேன். காரணம் அதுவல்ல," என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு இந்த முடிவை எடுத்தீர்களா? என்ற கேள்விக்கு, "இது ஏற்கெனவே எடுத்த முடிவு. பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். இரண்டையும் தொடர்புப் படுத்த வேண்டாம்," என்றார்.