Don't Miss!
- News தென்னிந்தியாவில் பாஜக எத்தனை சீட்களில் வெல்லும்! வந்து விழுந்த கேள்வி.. ரேவந்த் ரெட்டி பளிச் பதில்
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரு நாள் போதுமா, பாலமுரளி கிருஷ்ணாவை பற்றி பேச இன்றொரு நாள் போதுமா?
சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் காலமானார். அவர் பாடாத மேடைகளே கிடையாது என்று கூறும் அளவுக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
சென்னையில் வசித்து வந்த பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 86.
பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில் உள்ள சங்கரகுப்தம் பகுதியில் பிறந்தவர்.
இசை
6 வயதில் இருந்து பாடத் துவங்கிய பாலமுரளிகிருஷ்ணா 8 வயதில் விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் பாடினார்.
பாடல்
15 வயதில் 72 மேலகர்த ராகங்களை கரைத்துக் குடித்தவர். பாடுவது தவிர கஞ்சிரா, மிருதங்கம், வயலினும் அருமையாக வாசிப்பார். உலக அளவில் அவர் இதுவரை 25 ஆயிரம் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
சினிமா
பாலமுரளிகிருஷ்ணா பல பக்திப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், பாடியுள்ளார். சினிமா பாடல்களும் பாடியுள்ளார். ஏவிஎம் தயாரிப்பில் 1967ம் ஆண்டு வெளியான பக்த பிரகலாதா படத்தில் நாரதராக நடித்து தனது திரையுலக பயணத்தை துவங்கினார் பாலமுரளிகிருஷ்ணா.
செவாலியே
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்கான தேசிய விருதுகளை பெற்றவர். மத்திய அரசு அவருக்கு பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கியது. சங்கீத கலாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கியவர் பாலமுரளிகிருஷ்ணா.