Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
மீண்டும் சூர்யாவுடன் கைகோர்க்கும் ஹரி.. சிங்கம் 3-ம் பாகமா?
விஷாலின் பூஜை படத்துக்குப் பிறகு, மீண்டும் சூர்யாவுடன் கை கோர்க்கிறார் இயக்குநர் ஹரி.
பூஜை படம் தீபாவளிக்கு வெளியாவதையொட்டி, இயக்குநர் ஹரி இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பூஜை' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன். அவரிடம் 2 கதைகள் சொல்லியிருக்கிறேன். அதில் அவர் எதை தேர்வு செய்வார் என்று தெரியவில்லை. இப்படம் ‘சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமாக இருக்குமா? என்பதை இப்போதே சொல்ல முடியாது," என்றார்.
ஏற்கெனவே சூர்யா-ஹரி கூட்டணியில் ‘சிங்கம்', ‘சிங்கம்-2' ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகின. மேலும் ‘சிங்கம்' படத்தின் 3-ம் பாகம் எடுக்கவும் தான் தயார் என்று ஹரி கூறியிருந்தார்.
ஆனால் அவர், விஷாலை வைத்து ‘பூஜை' படத்தை இயக்க ஆரம்பித்தார்.
பூஜைக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைய முடிவு செய்திருக்கும் ஹரி, இந்த படத்தை ‘சிங்கம்' படத்தின் 3-ம் பாகமாக எடுக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறவுமில்லை.