Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த அகி மியூசிக், எக்கோவுக்கு நீதிமன்றம் தடை!
சென்னை: இளையராஜாவின் பாடல்களை இனி அகி மியூசிக் மற்றும் எக்கோ நிறுவனங்கள் வெளியிடவோ விற்பனை செய்யவோ கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களை எக்கோ நிறுவனம் உரிய காப்புரிமைத் தொகை தராமல் சில நிறுவனங்கள் விற்பனை செய்து வந்ததாக இளையராஜா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இளையராஜா பாடல்களை வெளியிட்டு விற்பனை செய்து வந்த அகி மியூசிக், எக்கோ போன்ற நிறுவனங்கள் இனி இந்தப் பாடல்களை வெளியிட நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் அந்த மனுவில்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், "இளையராஜாவின் பாடல்களை விற்கவோ, உற்பத்தி செய்யவோ, வேறு நபர்களுக்கு அனுப்பவோ தடை செய்யப்பட்டுள்ளது.
மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும்," என அகி மியூசிக்கின் அகிலன் லட்சுமணன், எக்கோ நிறுவனத்தின் நரசிம்மன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.