Don't Miss!
- News ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
நடிகர் சங்க கட்டடம்.... 2 வாரங்களுக்கு இடைக்காலத் தடை
சென்னை: நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகளைச் தொடர மேலும் இரு வாரங்களுக்கு தடையை நீட்டித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ரூ 26 கோடி ரூபாயில் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டடத்துக்கு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர்.
இதனிடையே, வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம் ஶ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதாகக் கூறப்பட்டிருந்தது. தியாகராய நகரில் ஹபிபுல்லா, பிராகாசம் தெருவை இணைக்கும் பகுதியில் இந்த ஆக்கிரமிப்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வேறு சாலையைப் பயன்படுத்தி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டட பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.