Don't Miss!
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- News முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் திடீர் விசிட்.. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.. பக்கத்தில் அது யாரு?
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒரு செல்போனிலிருந்து கிளம்பும் பேய்...! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!
ஒரு செல்போனிலிருந்து பேய் கிளம்பினால் என்னவாகும்? என்னென்ன கலாட்டா நடக்கும்... இப்படி யோசித்து ஒரு திரைக்கதையை உருவாக்கி அதற்கு ஹலோ நான் பேய் பேசறேன் என்று தலைப்பிட்டுள்ளனர்.
குஷ்புவின் அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குனர் சுந்தர். சி தயாரிக்கும் படம் இது.
வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன், விடிவி கணேஷ், மதுமிதா, சிங்கம்புலி, யோகிபாபு, சிங்கப்பூர் தீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்பி எடிட்டிங் செய்துள்ளார்.
இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களை இயக்கிய எஸ் பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், "இது திகிலுடன் கூடிய ஒரு காமெடி பேய்ப்படம். இது மற்ற காமெடி பேய் படங்களிலிருந்து மாறுபட்ட திரைப் படமாக இருக்கும்.
ஒரு செல்ஃபோனில் இருந்து கிளம்பும் பேயை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த செல்ஃபோன் யார் யாரிடத்தில் பயணிக்கிறது, அவர்களை அந்தப் பேய் என்ன பாடு படுத்துகிறது, அதனால் அவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை திகில் கலந்த காமெடியுடன் சொல்லியிருக்கிறோம். இந்த கதையை இயக்குனர் சுந்தர்.சி அவர்களிடத்தில் சொன்னவுடன் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. படத்திற்கான அனைத்து வேலைகளையும் உடனே துவங்க சொல்லிவிட்டார்.
இத்திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்", என்றார்.
அடுத்த மாத இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.