Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரமாண்ட இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ.10,000 பரிசு: பாஜக தலைவர்
போபால்: பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை செருப்பால் அடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என பாஜக தலைவர் அகிலேஷ் கந்தெல்வால் அறிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோரை வைத்து வரலாற்று படமான பத்மாவதியை இயக்கி வருகிறார்.
ராணி பத்மாவதியை மையமாக வைத்து கதை நகர்கிறது.
தாக்குதல்
படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்தபோது ராணி பத்மாவதி பற்றிய வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி கர்னி சேனா அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தை சேதப்படுத்தினர்.மேலும் பன்சாலியையும் தாக்கினர்.
பாலிவுட்
பன்சாலி படப்பிடிப்பு தளத்தில் தாக்கப்பட்டது குறித்து அறிந்து பாலிவுட்காரர்கள் கொந்தளித்துள்ளனர். நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது, வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
பரிசு
சஞ்சய் லீலா பன்சாலியை செருப்பால் அடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் அகிலேஷ் கந்தெல்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பத்மாவதி
பத்மாவதி இந்து ராணி என்பதால் அவரை பற்றிய வரலாற்று தகவல்களை பன்சாலி மாற்றிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தின் தலைப்பை மாற்றவும் பன்சாலியிடம் கர்னி சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.