Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மன்னர் மன்னனாக நடித்து மனநோய் வந்துவிட்டதோ என பதறிய "ஜோக்கர்"
சென்னை: ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரிய வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தில் மன்னர்மன்ன்னாக வந்து நம்மை அசரடித்தவர் குருசோமசுந்தரம். அடிப்படையிலேயே நடிப்பு பயிற்சி கொடுப்பவர் என்பதாலேயோ என்னவோ இவர் ஏற்றுக்கொள்ளும் கேரக்டர்கள் எல்லாவற்றையுமே பேசவைத்துவிடுவார்.
அப்படி அவரது கெரியரிலேயே மிக முக்கியமான படமாக ஜோக்கர் அமைந்துவிட்டது. இரண்டு வித கேரக்டர்களுக்கும் அனாயசமாக வித்தியாசம் காட்டியிருந்தார். இந்த படத்துக்காக மன்னர்மன்னனாக மாறிய சோமசுந்தரம் அதைவிட்டு வெளியே வர ரொம்பவே சிரமப்பட்டாராம்.
தன் உடல் மொழியில் இருந்து பேச்சு வரை அந்த பாதிப்பு இருந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் மனநோய் வந்துவிட்டதோ என்று பதறும் அளவுக்கு மாறியிருக்கிறார். அந்த கேரக்டரில் வெளியே வருவதற்காக களரி கலை பயின்று மனதை மாற்றியிருக்கிறார்.