twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் - கடைசி பகுதி

    By Shankar
    |

    -இயக்குநர் முத்துராமலிங்கன்

    கட்டுரையின் கடைசி பகுதியை இரு தினங்கள் தாமதப்படுத்தியதற்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன்.

    தாமதமானதற்கு நேற்று நடந்த மூவி ஃபண்டிங்' சக்சஸ் மீட்டும் ஒரு காரணம்.

    கிரவுட் ஃப்ண்டிங்கில் உருவான கன்னட ‘லூசியா' படமும் அதன் இயக்குநரும் மிகவும் பிரபலம் என்பதால் அதுகுறித்து நான் பெரிதாக சொல்ல வேண்டியதில்லை.

    அன்று இரவு பவன் குமார் அனுப்பியிருந்த மெஸேஜின் சாரம் இதுதான்.

    How movie funding scheme became successful?

    ‘நண்பர்களே உங்கள் மூவிஃபண்டிங் முயற்சி குறித்து கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். இத்திட்டத்திற்கு உதவ முன்வருபவர்கள் குறித்து கவனமாக இருங்கள். நிறுவனத்தை சட்டரீதியாக பதிவு செய்யத் தவறாதீர்கள்.

    உடனே அவருக்கு நன்றியும், நாங்கள் நிறுவனத்தை சட்டரீதியாக, மூத்த வழக்கறிஞர்கள், ஆடிட்டர்களை ஆலோசித்து சட்டரீதியாக பதிவு செய்திருக்கும் விபரத்தையும் அனுப்பினேன்.

    துவக்கத்தில் முதல் பதினைந்து நாட்கள் இத்திட்டம் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. நடிக்கும் ஆசையில் பணம் கொடுத்து ஏமாந்து, அந்தப் படங்கள் ரீலீஸாகாமல் போன விரக்தியிலிருந்த பலபேரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அனைவருமே காதல் தோல்வியால் தாடி வளர்ப்பவர்கள் போல ஒரே மாதிரியாக காட்சி அளித்தார்கள்.

    How movie funding scheme became successful?

    ஒரு நன்னாளில் பொற்கோ என்ற சாஃப்ட்வேர் எஞ்சினியர் நடிக்கும் ஆசையுடன் முன்வந்து, சுமார் நூறு கேள்விகள் கேட்டார். இருநூறு பதில்கள் சொல்லி அவரை கன்வின்ஸ் செய்து பத்து லட்சம் முதலீடு செய்ய வைத்தோம்.

    மந்த நிலையை மந்தகாசம் ஆக்கும் சூட்சுமம் அந்தப் புள்ளியிலிருந்துதான் எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. மூளையின் ஒரு ஓரத்தில் சின்னதாய் பல்ப் ஒன்று எரிய ஆரம்பித்த தருணம் அது.

    இதுகுறித்து எல்லோருக்கும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே பதில்களை வழங்கினால் நாம் தேடும் பங்குதாரர்கள் வந்துவிடுவார்கள் என்று தோன்றியது.

    How movie funding scheme became successful?

    அதன் முதல் கட்டமாக பொற்கோ இத்திட்டத்தில் இணைந்து கொண்டதை வெளிப்படையான செய்தியாக்கினோம். மூவி ஃபண்டிங் திட்டத்தின் ஒவ்வொரு நகர்வையும் பொதுவெளியில் சிறிதும் தயக்கமின்றி பகிர ஆரம்பித்தோம்.

    முதலீடு செய்ய ஆரம்பித்தவர்களுக்கு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாள் செலவும், எங்கே படபிடிப்பு, எத்தனைபேர் இன்றைக்கு, என்னென்ன செலவுகள் என்று துவங்கி புரடக்‌ஷன் பையனின் பேட்டா செலவு உட்பட இவ்வாறே கணக்கு காட்டப்படும் என்பதை வெளிப்படையாக்கினோம்.

    சினிமாவில் முதலீடு செய்ய வருபவர்களில் பெரும்பாலானோருக்கு ‘இங்கு ரிஸ்க் அதிகம் என்று தெரிந்தே வருகிறார்கள். பணம் வரலாம்... போகலாம்... ஆனால் நாம் ஏமாற்றப்படக் கூடாது. ஷூட்டிங்குக்கு என்று காசு கேட்டுவிட்டு அந்தக் காசில் டைரக்டர் சொகுசாய் கார் வாங்கிக்கொண்டு, நடிகையின் வீட்டில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்துகொண்டு காலாட்டக் கூடாது என்ற எண்ணம் உள்ளவர்களே அதிகம்.

    இப்படி அனைத்தையும் வெளிப்படையாக ஷேர் பண்ணத் துவங்கியவுடன் எங்கள் மேல் பலருக்கு நல்லெண்ணம் ஏற்பட்டது.

    பெங்களூரிலிருந்து மோகன்குமார், ஈரோட்டிலிருந்து சூர்யா வடிவேல், ராமநாதபுரத்திலிருந்து குமாரராஜா, சென்னை ‘சவுண்ட் பார்ட்டி' ஸ்டுடியோ உரிமையாளர் சுதர்சன் லிங்கம் என்று வரிசையாக ஆர்வமாக முதலீடு செய்ய முன்வந்தார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தில் ஜெய்லானியின் நண்பர் குழலி புருசோத்தமன், அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு, எங்கள் இருவரையும் சிங்கப்பூர் வரவழைத்து அங்குள்ள அஞ்சப்பர் ஓட்டல் ஒன்றில் ‘மூவி ஃபண்டிங்' தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தார். அங்கு தற்செயலாக வந்த ஜெய்லானியின் உறவினர்கள் சையது இப்ராஹிம் மற்றும் ராஜா ஆகியோர் இமாலய உதவிக்கு முன்வந்தனர். அடுத்த பட அறிவிப்பு சமயத்தில் உறுதியாக உதவுவார்கள் என்று நம்பக்கூடிய சில நட்புகளும் அங்கே கிடைத்தன.

    பெரிய குட்டிக்கரணங்கள் அடிக்கவேண்டிய அவசியம் எதுவுமற்று, ஒருவழியாக திட்டமிட்டபடி இருபடங்களும் இலக்கை அடைய இரு மாதங்களாகின. நேற்று பிரசாத் லேப்பில் இந்த இருமாத பயணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டோம்.

    எங்கள் இரு படங்களுக்கு நிதி திரட்டல் சாத்தியமானது என்பது இந்த மூவி ஃபண்டிங் திட்டத்தின் வெற்றி என்று நாங்கள் கருதவில்லை. நல்ல கதையுடன் அலையும் திறமைசாலிகள், முதல் படம் நன்றாக இருந்தும் சரியான வெளியீடு கிடைக்காமல் தோற்றுப்போனவர்கள், படம் தயாரிக்க விரும்பி தவறான நபர்களிடம் மாட்டி ஏமாறுபவர்கள் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக கொஞ்சமாவது நாங்கள் இயங்க முடியுமா என்ற ஆதங்கத்துடன்தான் இறங்கியிருக்கிறோம்.

    சதா சில ரகசியங்களை தன்னுள்ளே ஒளித்து வைத்தபடி, எப்போதும் ஒரு மூடுமந்திரமாகவே காட்சிதரும் சினிமாவின் இரும்புக் கதவை இன்னும் கொஞ்சம் பலமாக முட்டித் திறக்கும் ஒரு சிறுமுயற்சியே இது.

    ஸ்ஸ்ஸ்... அப்பாடா ஒரு வழியா டைட்டிலை டச் பண்ணியாச்சி...!!

    (முற்றும்)

    English summary
    How movie funding scheme became successful? Here is the experience of director Muthuramalingan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X