Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹிருத்திக் ரோஷன் – சூசன்னே விவாகரத்து: நிரந்தரமாக பிரிந்தனர்
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அவரது மனைவி சூசன்னேவிற்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் நிரந்தரமாக பிரிந்துள்ளனர்.
மும்பையில் உள்ள பந்த்ரா குடும்பநல நீதிமன்றம் இவர்களின் விவாகரத்தினை உறுதி செய்தது. அதேசமயம் அவர்களின் இரண்டு குழந்தைகள் யாருடைய பராமரிப்பின் கீழ் வளர்வார்கள் என்று நீதிமன்றம் உத்தரவிடவில்லை.
ஹிருத்திக் ரோசன் தான் சிறுவயதில் இருந்தே காதலித்த சூசன்னேவை 2000மாவது ஆண்டு கைபிடித்தார் 13 ஆண்டுகால திருமண வாழ்வின் சாட்சியாக இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த வாழ்ந்தனர். பின்னர் மும்பை பாந்தரா பகுதியில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் இருவரும் தனித்தனியாக விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். இருவரும் மனமொத்து பிரிவதாக அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டனர்.
இந்த விவாகரத்துக்கு சம்மதிக்க தனக்கு ஹிருத்திக் ரோஷன் ரூ.400 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று சூசன்னே கேட்டார். அந்த தொகையை ஹிருத்திக் ரோஷனும் கொடுக்க சம்மதித்தாக கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஜீவனாம்சம் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர், இந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும், தனது மனைவியை எப்போதும் நேசிப்பதாகவும், பணம் தொடர்பாக கருத்து வேறுபாடு இல்லை என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.
சூசன்னே தரப்பிலும், அவர் தனது துறையில் பணிபுரிந்து, தனி மனிதராக தனது நிதி தேவைகளை தானே பூர்த்தி செய்யும் அளவில் தான் இருக்கிறார். இருவருக்கும் நிதி தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.
ஹிருத்திக் ரோஷனுக்கு மொத்தம் ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன. ஜுகு கடற்கரையில் ஹிருத்திக் பெயரில் பிரம்மாண்ட பங்களா வீடு உள்ளது. பெங்களூரில் 100 ஏக்கர் நிலம் உள்ளது. ஆந்தேரியில் நான்கு மாடி கட்டிடம் உள்ளது. சிங்கப்பூரில் ஒரு வீடு இருக்கிறது. இந்த வீடு சூசன்னே பெயரில் இருக்கிறது.
பல வாரகாலமாக நடைபெற்ற இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் - சூசன்னே தம்பதிக்கு பந்த்ரா குடும்ப நல நிதிமன்றம். நேற்றைய தினம் விவகாரத்து வழங்கியது அதேசமயம் இரண்டு குழந்தைகளையும் யார் வளர்ப்பது என்பது பற்றி இன்னும் சில தினங்களில் தீர்ப்பு அளிக்கப்படும்
பாலிவுட் உலகின் மிகவும் பிரபலமான ரொமான்ஸ் ஜோடியான ஹிருத்திக் - சூசன்னே பிரிவு அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!