twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    #suchileaks: தனுஷ் தரப்பில் சொல்லி தான் எனக்கே மேட்டர் தெரியும்: சுசித்ரா

    By Siva
    |

    சென்னை: தனுஷ் தரப்பில் இருந்து போன் செய்து உங்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றார்கள். அதன் பிறகே எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டுபிடித்தேன் என பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.

    பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கில் தனுஷ் உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

     ட்விட்டர்

    ட்விட்டர்

    ட்விட்டரில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் என்னை ஃபாலோ செய்யும் நிலையில் என் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். தனுஷ் தரப்பில் இருந்து போன் செய்து உங்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றார்கள்.

    ஹேக்

    ஹேக்

    தனுஷ் தரப்பில் இருந்து சொன்ன பிறகே எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டுபிடித்தேன். அந்த புகைப்படங்களை நீக்க முயன்றேன். ஆனால் ஹேக் செய்தவர்கள் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டார்கள். இது குறித்து நான் ட்விட்டர் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி என் கணக்கை முடக்குமாறு கூறினேன்.

    விவாகரத்து

    விவாகரத்து

    நானும், என் கணவர் கார்த்திக்கும் 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியும் தற்போது விவாகரத்து பெற உள்ளோம். அவர் ராமர் போன்றவர். இருப்பினும் எங்களுக்குள் சில தீர்க்கமுடியாத பிரச்சனைகள் உள்ளது.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    என்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அது என் விவாகரத்து சம்பந்தப்பட்டது. என் திருமண வாழ்க்கையை இப்படி தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் என சுசித்ரா தெரிவித்துள்ளார்.

    English summary
    Singer Suchitra said that she came to know about her twitter account getting hacked after someone from Dhanush's side informed her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X