Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாகுபலி பிரபாஸுடன் செம சண்டை: மனம் திறந்த சண்டக்கோழி நடிகை
மும்பை: பாகுபலி புகழ் பிரபாஸுடன் சண்டை போட்டதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் நடிகை கங்கனா ரனாவத்தின் பெயரை சொன்னால் அந்த சண்டக்கோழியா என்று கேட்கும் அளவுக்கு சண்டை போடுவதற்கு பெயர் எடுத்துவிட்டார்.
நடிகர்கள், நடிகைகள் முதல் இயக்குனர்கள் வரை பலருடன் அவருக்கு பிரச்சனை உள்ளது.
பிரபாஸ்
கங்கனா தான் நடித்த ரங்கூன் படத்தை விளம்பரப்படுத்தியபோது தெலுங்கு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் சண்டை போட்டது பற்றி பேசினார்.
சண்டை
பிரபாஸ் சிறப்பாக செயல்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். ஏக் நிரஞ்சன் படத்தில் நாங்கள் நடிக்கத் துவங்கியபோது அதிகமாக சண்டை போடுவோம். ஒரு முறை சண்டை பெரிதாகி பேசுவதை நிறுத்திவிட்டோம் என்றார் கங்கனா.
பாகுபலி
சண்டை போட்டு பேச்சை நிறுத்திய பிறகு பாகுபலி படத்தில் பிரபாஸை பார்த்து வியந்தேன். அவரின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கங்கனா தெரிவித்தார்.
கான்கள்
பாலிவுட்டில் பெருந்தலைகளாக உள்ள சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கானுடன் நடிக்க மறுத்து அவர்களின் கோபத்திற்கும் ஆளாகியவர் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.