Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மழை நம் அனைவரையும் தற்காலிக அகதிகளாக மாற்றியிருக்கிறது - ஏ.ஆர்.ரகுமான்
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் வெள்ளம் புகுந்தது.
தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை சென்னை மக்களை மிகவும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை மக்களின் வீடுகளுக்குள் புகுந்த மழை, வெள்ளம் பிரபலங்களின் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை.
ஏற்கனவே நடிகர் சித்தார்த், நடிகை கனிகா ஆகியோர்களின் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் நேற்று வெள்ளநீர் புகுந்தது.
Friends and Well wishers, thank you for your kind concerns. It's very difficult to see fellow Chenaiites and people...
Posted by A.R. Rahman on Thursday, December 3, 2015
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இதுகுறித்து பின்வருமாறு கூறியிருக்கிறார் " என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் அக்கறைகளுக்கும் நன்றி.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைக் காண மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நம்மில் பலர் இந்த மழையால் தற்காலிக அகதிகளாகி மாறியிருக்கிறோம்.என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ஸ்டுடியோ குழுவினர் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வீடு மற்றும் ஸ்டுடியோவிற்குள் புகும் வெள்ள நீரை பம்ப் மூலமாக வெளியேற்றி வருகின்றனர்.
சென்னை சரியான வகையில் மீண்டும் புதுப்பிக்கப்படும் மற்றும் அதன் மூலமாக நாம் அனைவரும் எதிர்வரும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கப்படுவோம் என்று நம்புகிறேன்.
இதனை நாம் சுலபமாக செய்திடும் வகையில் கடவுள் நமக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்".