Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சண்டக்கோழி 2- ல் நடிப்பது உண்மைதான்... ஆனால் வில்லனாக அல்ல!- சத்யராஜ்
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தில் நான் நடிப்பது உண்மைதான்.. ஆனால் வில்லனாக நடிக்கவில்லை என்று சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
விஷால் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘பாயும் புலி'. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து ‘சண்டக்கோழி' இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்கிறார்.
முதல் பாகத்தை எடுத்த லிங்குசாமியே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடி யார் என்பது முடிவாகவில்லை.
முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் விஷாலுக்கு அப்பாவாகவே நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு சத்யராஜ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை சத்யராஜ் மறுத்துள்ளார்.
"விஷாலின் ‘சண்டக்கோழி 2' படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறேன்," என்று சத்யராஜ் கூறியிருக்கிறார்.