Don't Miss!
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இறைவி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்- ஞானவேல் ராஜா
சென்னை: இறைவி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக, இறைவி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படத்தில், தயாரிப்பாளர்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகளை வைத்திருப்பதாக சுரேஷ் காமாட்சி குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்தத் தகவல் தயாரிப்பாளர்கள் மத்தியில் வேகமாகப் பரவ படத்தைப் பார்த்து விட்டு முடிவு செய்வதாக கூறியிருந்தனர்.
இறைவி
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.
எஸ்.ஜே.சூர்யா
இறைவியில் படத்தை எடுத்து விட்டு அதனை வெளியிட முடியாமல் தவிக்கும் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். இதில் தயாரிப்பாளரால் படம் தாமதமாவது போல காட்சிகளை அமைத்திருக்கின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ''காட்சிப்படுத்துதல் முக்கியம் என்பதைவிடவும் காயப்படுத்துதல் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்'' என்று அறிவுரை கூறியிருந்தார்.
தயாரிப்பாளர் சங்கம்
தயாரிப்பாளர்கள் மத்தியில் இந்த செய்தி வேகமாகப் பரவியதால் இப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றை இறைவியின் தயாரிப்பாளர்களில் ஒருவரான் ஞானவேல் ராஜா ஏற்பாடு செய்திருந்தார். நேற்று ஆர்கேவி தியேட்டரில் சுமார் 150 க்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் இப்படத்தைப் பார்த்தனர்.
நடவடிக்கை
கார்த்திக் சுப்புராஜ் விவகாரத்தில் முடிவை நாளை அறிவிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. அதே நேரம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதகாகக் கூறியிருக்கிறார். மறுபக்கம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநர் சங்கத்தில் ஆதரவு கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.