Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இறுதி மூச்சு உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன் - சங்கர் மகாதேவன்
சென்னை: என் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன் என்று பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் கூறியிருக்கிறார்.
4 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் சங்கர் மகாதேவன் தற்போது ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு இசை வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
உலகம் முழுவதும் 36,௦௦௦ வகுப்புகளுக்கும் அதிகமாக இதுவரை சொல்லித் தந்திருக்கும் இவருக்கு உலகம் முழுவதும் சுமார் 5௦௦௦ க்கும் அதிகமான மாணவர்கள் இருக்கின்றனர்.
47 நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுத்து வரும் சங்கர் மகாதேவன் சமீபத்திய பேட்டியொன்றில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
"நான் எனது கடைசி மூச்சுவரை உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன். இந்த வயதான பாடகனின் பாடலை யார் கேட்பது என்று மக்கள் கூறினாலும் நான் பாடுவதை விடமாட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
48 வயதாகும் சங்கர் மகாதேவன் கட்யார் கல்ஜாட் க்ஹுசாலி என்ற மராத்திப் படமொன்றில் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுபோத் பாவே என்பவர் இயக்குகிறார்.
பாடகர், இசையமைப்பாளரைத் தொடர்ந்து நடிகராக சங்கர் மகாதேவன் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.