Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சென்னை டூ சிங்கப்பூர் காரில் செல்வது எப்படி?.. அஜீத்திடம் கேட்ட ஜிப்ரான்
சென்னை: இசையமைப்பாளர் ஜிப்ரான் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காரில் எப்படி செல்வது? என்று நடிகர் அஜீத்திடம் கேட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிப்ரான். வாகை சூடவா படத்தின் மூலம் அறிமுகமான ஜிப்ரான் தொடர்ந்து பாபநாசம், தூங்காவனம் மற்றும் உத்தமவில்லன் போன்ற படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.
A random wish.So many reactions!I wish I can get advice frm the KING of Drives in Kollywood for Chennai 2 Singapore! pic.twitter.com/a3g5cY0R6g
— Ghibran (@GhibranOfficial) January 4, 2016
தற்போது ஜிப்ரான் மனதில் ஒரு ஆசை தோன்றியிருக்கிறது. அதாவது சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காரில் செல்ல வேண்டும் என்பதே அது.
இதில் சிங்கப்பூருக்கு எப்படி காரில் செல்வது என்று தனக்கு தெரியவில்லை. இதனால் கார் ஓட்டுவதில் மன்னன் என்று பெயரெடுத்த நடிகர் அஜீத் தனக்கு உதவ வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இவர் பதிவிட்ட இந்த ட்வீட்டிற்கு அஜீத்தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வரவில்லை. எனினும் அவரது ரசிகர்கள் கண்டிப்பாக அஜீத் உங்களுக்கு உதவி செய்வார்.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு பாதுகாப்பாக சென்று வாருங்கள் என்று கூறி வருகின்றனர். இந்த விஷயத்தில் ஜிப்ரானுக்கு அஜீத் உதவி செய்வாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.