Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமாக நினைக்கிறேன்: ராஜ்கிரண்
சென்னை: விளம்பர படத்தில் நடிப்பதை கேவலமாக கருதுவதாக நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் கழித்து ராஜ்கிரண் ஹீரோவாக நடித்துள்ள ப. பாண்டி படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் நீங்கள் இதுவரை பார்த்திராத ராஜ்கிரணை பார்ப்பீர்கள்.
பிரபலங்கள் விளம்பரப் படங்களில் நடிப்பது புதிது அன்று. இந்நிலையில் இது குறித்து ராஜ்கிரண் கூறியிருப்பதாவது,
விளம்பரம்
படத்தில் நடிக்கும்போது மக்களுக்கு நல்ல கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் விளம்பரப் படங்களில் நடிப்பதில் அப்படி எதுவும் இல்லை.
பணம்
விளம்பரப் படங்களில் நடிப்பது காசுக்காக மட்டுமே. விளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமான விஷயமாக கருதுகிறேன். அது எப்படி ஒரு பொருளை பற்றி தெரியாமல் அதை விளம்பரப்படுத்துவதோ.
ஏமாற்று வேலை
ஒரு பொருளை பற்றி எதுவுமே தெரியாமல் காசுக்காக அதை விளம்பரப்படுத்துவது மக்களுக்கு செய்யும் துரோகம். நான் அந்த துரோகத்தை செய்ய மாட்டேன்.
ராஜ்கிரண்
நான் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால் ராஜ்கிரணே கூறிவிட்டார் என்ற நம்பிக்கையில் மக்கள் வாங்குவார்கள். அது தவறான பொருளாக இருந்தால் அது நான் மக்களுக்கு செய்யும் துரோகமாகிவிடும் என்றார் ராஜ்கிரண்.