Don't Miss!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Finance மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - வைப்புநிதி திட்டம்: எதில் அதிக வரி சலுகை பெற முடியும்?
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
விளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமாக நினைக்கிறேன்: ராஜ்கிரண்
சென்னை: விளம்பர படத்தில் நடிப்பதை கேவலமாக கருதுவதாக நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் கழித்து ராஜ்கிரண் ஹீரோவாக நடித்துள்ள ப. பாண்டி படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் நீங்கள் இதுவரை பார்த்திராத ராஜ்கிரணை பார்ப்பீர்கள்.
பிரபலங்கள் விளம்பரப் படங்களில் நடிப்பது புதிது அன்று. இந்நிலையில் இது குறித்து ராஜ்கிரண் கூறியிருப்பதாவது,
விளம்பரம்
படத்தில் நடிக்கும்போது மக்களுக்கு நல்ல கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் விளம்பரப் படங்களில் நடிப்பதில் அப்படி எதுவும் இல்லை.
பணம்
விளம்பரப் படங்களில் நடிப்பது காசுக்காக மட்டுமே. விளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமான விஷயமாக கருதுகிறேன். அது எப்படி ஒரு பொருளை பற்றி தெரியாமல் அதை விளம்பரப்படுத்துவதோ.
ஏமாற்று வேலை
ஒரு பொருளை பற்றி எதுவுமே தெரியாமல் காசுக்காக அதை விளம்பரப்படுத்துவது மக்களுக்கு செய்யும் துரோகம். நான் அந்த துரோகத்தை செய்ய மாட்டேன்.
ராஜ்கிரண்
நான் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால் ராஜ்கிரணே கூறிவிட்டார் என்ற நம்பிக்கையில் மக்கள் வாங்குவார்கள். அது தவறான பொருளாக இருந்தால் அது நான் மக்களுக்கு செய்யும் துரோகமாகிவிடும் என்றார் ராஜ்கிரண்.