Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மழை வெள்ள பாதிப்பில் மக்கள் இருக்கும்போது எனக்கெதற்கு பாராட்டு விழா?- இளையராஜா
ஆயிரம் படங்கள்... அதுவும் தனி இசையமைப்பாளர் - பின்னணி இசைக் கோர்ப்பாளராக... யாரால் செய்ய முடியும் இந்த பெரும் சாதனையை, இளையராஜாவைத் தவிர!
உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என மேலை நாடுகளும் வியக்கும் இளையராஜா இசையமைத்துள்ள ஆயிரமாவது படம் தாரை தப்பட்டை. பாலா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
1000 படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட விழா எடுத்து தாரை தப்பட்டை இசையை வெளியிட வேண்டும் என்று படக்குழுவும், இசையை வெளியிடும் சத்யம் குழுமமும் பெரும் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
டிசம்பர் 17-ம் தேதி இசை வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும் மழை, வெள்ள பாதிப்பு என மக்கள் படும் துயரங்களைப் பார்த்த இளையராஜா, 'இப்படியொரு சூழலில் பிரமாண்ட விழா, பாராட்டு விழா எல்லாம் தேவையா... இவை எதுவுமே வேண்டாம். ஆடம்பரமில்லாமல், அமைதியாக இசை வெளியீட்டை நடத்துங்கள்," என இயக்குநர் பாலாவிடம் கூறிவிட்டாராம்.
எனவே எளியமுறையில் வெளியாகிறது இளையராஜாவின் 1000வது பட இசை வெளியீடு.