Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இன்றைய இயக்குநர்கள் யாருக்கும் இளையராஜாவிடம் இசை கேட்டு வாங்கும் தகுதி இல்லை! - பாலா
இன்றைய இயக்குநர்கள் யாருக்கும் இளையராஜாவிடம் இசையைக் கேட்டு வாங்கும் தகுதி இல்லை என்று இயக்குநர் பாலா கூறியுள்ளார்.
சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள எல்வி பிரசாத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மைய மாணவர்களுக்காக திரைப்படத்தின் பின்னணி இசை குறித்த உரையாடல் நடந்தது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாலா பங்கேற்றனர்.
அப்போது இயக்குநர் பாலாவிடம் இளையராஜா இவ்வாறு கேள்வி எழுப்பினார்:
ஒரு நடிகரிடம் க்ளோசப் காட்சியில் ஒரு உணர்வைச் சொல்லி நடித்துக் காட்டச் சொல்லி இருக்கிறீர்களா? என்று கேட்டார் ராஜா.
அதற்கு பதிலளித்த பாலா, "ஓரளவுக்குத்தான் நான் வாங்க முடியும். சில நடிகர்களுக்கு உங்களுடைய நத்திங் பட் விண்ட் மாதிரியான இசையை ஒலிக்கவிட்டு, அதற்கு நடித்துக் காட்டச் சொல்லி படமாக்கியிருக்கிறேன். அப்படி எடுத்த காட்சிக்கு உங்கள் பின்னணி இசை சேர்ந்ததும் அந்த நடிப்பு இன்னும் உணர்வுப்பூர்வமாகத் தெரியும்.
உங்களிடம் இசை கேட்டு வாங்குவதற்கு இன்றைக்குள்ள இயக்குநர்கள் யாருக்கும் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே ஒருவர் கே விஸ்வநாத். அவருக்கு இருப்பதாக நினைக்கிறேன்," என்றார்.