Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இளையராஜா கச்சேரி என்று சொல்லி வெளிநாட்டில் வசூல் மோசடி!
தான் பங்கேற்கும் இசைக் கச்சேரி நடக்கப் போவதாகக் கூறி வெளிநாடுகளில் வசூல் மோசடி நடப்பதாகவும், அதுபோன்ற கச்சேரிகள் எதிலும் தான் பங்கேற்கவில்லை என்றும் இளையராஜா கூறியுள்ளார்.
இளையராஜா தலைமையில் இசைக்கச்சேரி நடக்கப் போவதாகக் கூறி சில நாடுகளில் வசூல் வேட்டை நடந்து வருவதாக இளையராஜாவுக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளன.
பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் இளையராஜா கச்சேரி என்று கூறி சிலர் விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளார்களாம்.
இதுபற்றி விசாரித்த இளையராஜா, உடனடியாக மறுப்பு தெரிவித்ததோடு, ரசிகர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நான் கச்சேரி நடத்தப் போவதாகக் கூறி சிலர் டிக்கெட் போட்டு விற்று வருவதாகக் கேள்விப்பட்டேன். இது முற்றிலும் தவறு. அப்படி யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. எனவே இந்த மோசடிக்கு ரசிகர்கள் பலியாக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.