Don't Miss!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இளையராஜா.. நாம் வாழும் காலத்தின் அதிசயம்! - கொண்டாடும் ரசிகர்கள்
காலையில் இருந்து "தாரை தப்பட்டை" இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், இன்றைய பொழுது உயிர் வாழ்க்கையின் வெகு அரிதான சிலிர்ப்பான கணங்களை திரும்பத் திரும்ப வழங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு செல்லின் உள்ளிருக்கும் நியூக்ளியசும் ஆடிக்களிப்பதை நாளங்களில் உணர முடிகிறது, துடிப்போடு கண்ணை மூடி வெவ்வேறு உலகங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இசை உடலை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் எப்போதோ சிறுவனாய் இருந்த காலத்தின் டவுசரைத் தேட வைக்கிறது, திருவிழாக் காலங்களில் கலர் கலராய் பறக்கும் பலூன்களில் ஏற்றிக் கொண்டு மறந்து போன அத்தை மகளின் கண்களில் இறக்கி விடுகிறது, கண்மாய்க் கரையெல்லாம் பஞ்சு மிட்டாய் பொதி நுரைக்க புளியங்காற்றை நாசியில் ஏற்றுகிறது.
பறையும், உறுமியும், நாதசுரமும், தவிலும் தான் இந்த மண்ணுக்கும், இந்த மண்ணில் முளைத்த இந்த உடலுக்குமான உயிர்ப்பான இசை என்று பொட்டில் அதிரும் நரம்புகளில் பறைக் குச்சியால் அடித்து அடித்து நொறுக்குகிறார் ராஜா. பறை முழங்க முழங்க இடையில் ஊதும் கொம்பின் இசை கண்ணீரை எங்கிருந்து கொண்டு வருகிறது என்று தெரியவில்லை.
மண்ணையும், உறவுகளையும் இழந்து வெகு தொலைவில் வாழும் எங்கள் அண்ணனும் தம்பியும், மாமனும் மச்சானும் இந்த இசையைக் கேட்டால் ஆடியும், அழுதும் தீர்த்து விடுவான். பறையின் தோலில் இருந்து கிளம்பி நரம்புகளை சூடேற்றி முறுக்கும் அற்புத இசை அனுபவம் நாயகன் அறிமுகம் செய்யப்படும் காட்சிக்கான பின்னணியாக ஒலிக்கிறது, கணினியில் இருந்து ராஜாவின் இசையைக் காதுக்குக் கொண்டு வரும் கருவியின் வயர்களை அவ்வப்போது ஆசுவாசப்படுத்தி அறுந்து விடாமல் பிடித்துக் கொள்கிறேன். ஆனாலும், அவை துடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
நலிந்து நகர மறுக்கும் வாழ்க்கையைச் சில நேரம் இசை உயிரமுதூட்டிப் பாதுகாக்கிறது, முறிந்த சிறகோடு பறத்தலைப் பற்றிய கனவு காணும் பறவைகளின் துளிர்க்கும் சிறகாய், காற்றடைத்த பையான மானுட உடலின் உணரக்கூடிய ஒற்றை உண்மையாய் இசை பெருகி வழிகிறது. ராஜா நாம் வாழும் காலத்தின் அதிசயம், நம் வாழ்க்கையின் எல்லாவற்றுக்குமான ஒற்றைத் தீர்வாய் உயிர் வாழும் இசைப் புதையல்.
- கை.அறிவழகன்
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!