Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இசைஞானி போற்றிய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா!
மறைந்த இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மீது பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டவர் இசைஞானி இசைஞானி. அவரை எந்த மேடையில், அல்லது நேரில் பார்த்தாலும் காலில் விழுந்து ஆசி பெறுவார் இளையராஜா.
இளையராஜா தனது புதிய படைப்புகளை முதலில் கேட்கத் தருவது பாலமுரளிகிருஷ்ணாவுக்குத்தான். திருவாசகம் ஆரட்டோரியோவை முழுவதும் முடித்துவிட்டு இளையராஜா முதலில் அழைத்தது பாலமுரளி கிருஷ்ணாவைத்தான். அந்த ஆல்பத்தை முழுமையாகக் கேட்ட பாலமுரளிகிருஷ்ணா, "இந்த திருவாசகத்தைக் கேட்கும் ஒவ்வொரு ஆத்மாவும் தூய்மையாகிவிடும்," என்றார்.
இளையராஜா 2011-ல் நடத்திய இசைக் கச்சேரியில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்.. பாடலை பாலமுரளி கிருஷ்ணாவை மேடையில் பாட வைத்தார். கிட்டத்தட்ட 81 வயது அப்போது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. ஆனால் துளியும் பிசிறின்றி, குரல் நடுக்கமின்றி பாடலைப் பாடி முடித்தபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று தாயகம் திரும்பிய பிறகு நடந்த பாராட்டு விழாவில், பாலமுரளி கிருஷ்ணாதான் இசையின் ஆதார ஸ்ருதி என்று புகழாரம் சூட்டினார் இளையராஜா.