Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அம்மான்னா சும்மா இல்லடா...! - இளையராஜா பேச்சு
சென்னை: தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் இன்று அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த இளையராஜா, 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. என்று மட்டுமல்ல, அம்மான்னா சும்மா இல்லடா. என்றும் நான் பாடியிருக்கிறேன்," என்றார்.
தப்பா பாடிட்டானே பாரதி...
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், "தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாருடைய வரிகளை கேட்கும்போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி, என்றுதான் நினைப்பேன்.
சாப்பாடுதானே போடணும்!
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சாப்பாடு போடுவோம் என்று பாடியிருக்கணுமே தவிர, ஜெகத்தினை எதுக்கு அழிக்கணும்? சாப்பாடு போடுவதற்குத்தான் இங்கு இயற்கை காத்துக் கிடக்கிறதே. மழை பொழிந்தால் பயிர்கள் எல்லாம் விளைகின்றன.
பாராட்ட வேண்டிய திட்டம்
மழை பொழிந்தால் நிலம் ஈரமாகிறது. காய்ந்து போன பாறைகூட ஈரமாகிறது. அந்த ஈரம் நம்முடைய மனதில் இல்லையா? தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உணவளிப்போம். இந்த திட்டம் உண்மையாகவே மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
பசியோடுதான் வந்தேன்
தயாரிப்பாளர்கள் சங்கம் ஒற்றுமையாக இருந்து ஒரு காரியத்தை செய்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். எல்லோரும் பசியோடுதான் வந்தோம். நானும் பசியோடுதான் வந்தேன். பசி என்றால் கலைப் பசியோடு வந்தோம்.
அந்த நட்பு அப்படியே இருக்கா?
பசி எங்களுக்கு துன்பத்தை தரவில்லை. சந்தோஷமாக இருந்தோம். இந்த பெயர், புகழ் எல்லாம் வந்த பின்னால் அந்த சந்தோஷம், நட்புரிமை எல்லாம் இப்போது இருக்கிறதா என்றால், இல்லை. அந்த பழைய ஆட்கள் செத்துப் போய்விட்டார்கள். பழைய நண்பர்கள் அல்லவா? அவர்களெல்லாம் அந்த குணங்களோடு அப்படியே இறந்து போய்விட்டார்கள்.
பணம், புகழ்தான் விஷம்
அது இறந்து போவதற்கு காரணமாக இருந்தது பெயரும், புகழும், பணமும் அத்தனையும். அப்படியான ஒரு புகழும், பெயரும் நமக்கு தேவையா? மனித உள்ளத்தை கொல்லக்கூடிய இந்த விஷம் நமக்கு தேவையா?
மகிழ்ச்சி தரும் ஒற்றுமை
தயாரிப்பாளார்களா நீங்கள்? நல்ல நடிகர்களை, இயக்குனர்களை, நல்ல கதைகளை, ரசிகர்களை, தியேட்டர் உரிமையாளர்களை, நல்ல இசையமைப்பாளர்களை தயாரிக்கிறீர்கள், எதை நீங்கள் தயாரிக்கவில்லை.
எல்லாவற்றையும் தயாரிக்கும் நீங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்து இப்போது ஒற்றுமையாக இணைந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒற்றுமையோடு மட்டுமில்லாமல், ஒரு முடிவு எடுத்தால் 100 சதவீதம் அதற்கு பின்னால் நின்று ஒத்துழைப்பு கொடுக்கும் அளவுக்கு நீங்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அம்மான்னா சும்மா இல்லடா
இந்த அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்று மட்டும் நான் பாடவில்லை. 'அம்மான்னா சும்மா இல்லடா...' என்றும் கூட நான் பாடியிருக்கிறேன்," என்றார்.
அம்மா அன்னம் அளிக்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரால் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.