Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இளையராஜா இசையில் தேசிய கீதம் ஆல்பம்... விரைவில் ஷூட்டிங்!
இளையராஜா இசையில் அமிதாப் பாடவிருக்கும் தேசிய கீதம் ஆல்பத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ஆஸ்பத்திரியில் தங்கி ஓய்வு எடுத்தார். மேலும் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். என்றாலும், நேற்று மாலை வீடு திரும்பினார்.
வீட்டுக்கு வந்த சில மணி நேரத்திலேயே பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அவரது ஒலிப்பதிவு கூடத்துக்கு சென்றார். அங்கு ‘குற்றமே தண்டனை' என்ற படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியை தொடங்கினார்.
பாடலே இல்லாமல் உருவாகும் இந்த படத்தில் பின்னணி இசையே பிரதானம். எனவே அவர் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தனர்.
இது தவிர ‘ஒரு மெல்லிய கோடு', ‘கட்டம் போட்ட சட்டை' போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
அடுத்து அகில இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘தேசிய கீதம்' ஆல்பத்துக்கு இசையமைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளையும் இளையராஜா தொடங்கி இருக்கிறார்.
அமிதாப்பச்சன் நடித்து குரல் கொடுக்கும் இந்த ஆல்பத்தை பால்கி இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று இந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டின் போதே இதனை இளையராஜாவும் பால்கியும் அறிவித்தது நினைவிருக்கலாம்.