Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'இந்திப் பாடல்களின் ஆதிக்கத்தை ஒழித்தவர் இளையராஜா' - மு மேத்தா
ஈரோடு: தமிழகத்தில் நிலவிய இந்திப் பாடல்களின் ஆதிக்கத்தை ஒழித்தவர் இசைஞானி இளையராஜா என்றார் கவிஞர் மு மேத்தா.
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடந்த தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் எஸ்கேஎம் இலக்கிய விருதைப் பெற்றுக் கொண்ட கவிஞர் மு.மேத்தா பேசியதாவது:
பேசுவதைவிட மௌனம் சிறந்தது. மௌனத்தைக் காட்டிலும் பெரிதாக எதுவும் பேசிவிட முடியாது. கலைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதைச் சாதித்து காட்டியவர் இளையராஜா.
ஒரு காலத்தில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் உதட்டில் இந்திப் பாடல்கள்தான் உச்சரிக்கப்படும். ஆனால், இந்தி திரைப்பட பாடல்களின் ஆதிக்கத்தை தமிழகத்தில் ஒழித்த பெருமை இளையராஜவுக்குத் தான் உண்டு.
எளிமையான ராகம் மிகுந்த நாட்டுப்புற பாடல்களை தமிழ் திரைப்படங்களில் புகுத்தி இந்தி திரைப்படப் பாடல்களுக்கு முடிவுகட்டியவர் இளையராஜா. இந்தியாவை பல ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களை கூட தனது இசையால் அடிமைப்படுத்தி வைத்திருப்பவர் இளையராஜா.
தமிழகத்தில் உள்ள மூத்த தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகளால் பாராட்டப்பட்டு வருபவர்தான் இளையராஜா," என்றார்.
விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவர் எஸ்கேஎம். மயிலானந்தன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முஹம்மதுதாஜ் முஹையத்தீன் வரவேற்றார். செயலாளர் த.ஸ்டாலின் குணசேகரன் பாராட்டி பேசினார். அறக்கட்டளை துணைச் செயலர் மு.கண்ணையன் நன்றி தெரிவித்தார்.