Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இருமுகன்.. தொடரும் வசூல்... ரூ 50 கோடியைத் தாண்டியது!
விக்ரம நடித்த இருமுகன் படத்துக்கு வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமையும் நல்ல வசூல் கிடைத்துள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து இரு தினங்கள் (செவ்வாய், புதன்) விடுமுறை தினங்களாகவே வருவதால் படத்துக்கு எதிர்ப்பார்த்ததை விட நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்த இருமுகன் கடந்த வியாழன்று வெளியானது. முதல் நாளில் 5.5 கோடி ரூபாயை இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் வசூலித்ததாகவும், உலகெங்கும் 13 கோடியை வசூலித்ததாகவும் படத்தை வெளியிட்ட ஆரா சினிமாஸ் தகவல் வெளியிட்டது.
முதல் வார முடிவில் உலகெங்கும் இந்தப் படம் ரூ 50 ப்ளஸ் கோடி ரூபாயை வசூலாகப் பெற்றதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப வாரத்துக்குப் பிறகு வரும் இரண்டாவது வாரத்தின் முதல் நாள் இன்று. வேலை நாள்தான் என்றாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. அடுத்து நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதால் படத்துக்கு வசூல் குறையாது என நம்புகின்றனர்.
இதன் மூலம் நடிகர் விக்ரம் தனக்கான இடத்தை பாக்ஸ் ஆபீஸில் உறுதி செய்துள்ளார். புலி படம் மூலம் பாதிப்படைந்த தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் இந்தப் படத்தில் மீண்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெரிய படத்தை விநியாகித்த ஆரா சினிமாஸ், தன் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளதாக
கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.