Don't Miss!
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
திருநாள் படத்தின் கதைதான் கிடாரியா? இதுக்குத்தான் இம்புட்டு அலப்பறையா சசிகுமார்?
ஜீவா, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருநாள். வில்லன் சரத் லோகியாலாவிடம் அடியாளாக இருப்பார் ஜீவா. ஒரு கட்டத்தில் சரத்தின் செயல்கள் பிடிக்காமல் போக அவருக்கு எதிராகவே களம் இறங்குவார். இறுதியில் சரத்தை போட்டு தள்ளுவதாக படம் முடியும்.
அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவிருக்கும் கிடாரி படமும் இதே கதைதான் என்கிறார்கள். ட்ரெய்லரை பார்க்கும்போது நமக்கும் அந்த சந்தேகம் ஏற்படுகிறது. வேல ராமமூர்த்தியிடம் வேலை பார்ப்பவராக சசிகுமார் வருகிறார். ஒரு கட்டத்தில் வேல ராமமூர்த்தியையே எதிர்க்கும் சூழ்நிலை வருகிறது.
இறுதியில் சசியின் அப்பாவாக நெப்போலியன் எண்ட்ரி ஆகிறார்.
இந்த ஒன்லைன் காலம் காலமாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் படங்களில் வந்திருக்கிறது என்றாலும் ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஒரே லைனில் வருவதால் எப்படி இந்த குழப்பம் வந்திருக்கும் என கிடாரி படக்குழு தலையை பிய்த்துக்கொள்கிறதாம்.
என்ன பெரிய குழப்பம்.. கதைப் பஞ்சத்துல அடிப்பட்டுப் போய் ஒரே கதையை மாத்தி மாத்தி எடுக்கிறது என்ன புதுசா?