Don't Miss!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினியின் அடுத்த படம் லைக்காவுக்காமே!
ரஜினியின் அடுத்த படம் எந்திரன் 2.. ஷங்கர் இயக்குகிறார்.. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது..
-இன்று பிற்பகலிலிருந்து இணையதளங்கள், சமூக வலைத் தளங்களில் கலக்கும் செய்தி இதுதான்.
ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘எந்திரன்'. சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளிவந்த இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படம் வசூலில் பெரிய சாதனையை படைத்தது. இதுவரை தமிழில் வெளிவந்த எந்த படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.
இந்த கூட்டணி மீண்டும் இணையப் போவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், எந்திரன் 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்கப்போவது உறுதி செய்யப்பட்டு விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் ரஜினி இரட்டை வேடத்திலேயே நடிக்கவிருக்கிறாராம். ஷஇயக்கவிருக்கிறாராம். இப்படத்தை ‘கத்தி' படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, லைக்கா நிறுவனம் தயாரித்தது என்ற ஒரே காரணத்தால் கத்தி படம் பெரிய அளவில் பிரச்சினைகளைச் சந்தித்தது. பின்னர் நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் தாராளமாய் தமிழில் படம் தயாரிக்கலாம், எதிர்ப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பெற்றது.
இப்போது ரஜினி படத்தையும் லைக்கா தயாரிக்கிறது என்ற தகவலே சினிமா மற்றும் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.