Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஓ காதல் கண்மணி திருமணத்தை கொச்சைப்படுத்துகிறதா?
திருமண முறையையே கொச்சைப்படுத்துகிறது மணிரத்னம் படம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பேதும் சொல்லாத மணிரத்னம், என் படம் ரிலீசான பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெற்றி விழாவில் பங்கேற்ற மணிரத்னத்திடம், இந்தப் படத்தில் நீங்கள் திருமண முறையையே கொச்சைப்படுத்தி இருப்பதாகவும், அதனால்தான் யு சான்று கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறதே? என்று கேட்டபோது, "படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். என் மொழி சினிமா படத்தில்தான் கதையை கூறுவேன். வேண்டுமென்றே எதையும் திணிக்க மாட்டேன்," என்று பதில் கூறினார்.
ஆனால் மணிரத்னம் சொல்லாமல் மறைத்ததை, அந்த விழாவுக்கு வந்த வைரமுத்து வெளிப்படுத்திவிட்டார்.
வைரமுத்து கூறுகையில், "மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி' கலாச்சார அதிர்ச்சியை உருவாக்குகிற படம். மேல்நாட்டு தாக்கத்தால் கலாசாரங்கள் மாறுகின்றன. வரும் காலத்தில் திருமண முறை இருக்குமா என்ற சந்கேங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் பரிசோதனை முயற்சியாக இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது," என்றார்.
இருபது ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் வெற்றியை அடைய, இந்த கலாச்சார அதிர்ச்சி மணிரத்னத்துக்கு உதவுமா.. பார்க்கத்தானே போகிறோம்!