Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'விஜய் 60' கேரளாவில் நடந்த ரியல் சம்பவமா?
சில ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என காலடி எடுத்து வைக்க முடிவு செய்தார் விஜய். சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழையலாம் என முயன்றபோது ஆட்சியாளர்களை பகைத்துக் கொண்டால் சினிமா கேரியருக்கே ஆபத்து என்பதை சில சம்பவங்களால் உணர்ந்து போன வேகத்திலேயே திரும்பி விட்டார். இனி சினிமா மட்டும் தான் என்று பேட்டி கொடுப்பதை கூட தவிர்த்துவருகிறார்.
அரசியலுக்கு அச்சாரம் போட்டபோது அதற்காக தமிழில் மட்டும்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். ஆனால் இப்போது தனது மார்க்கெட் விரிவடைய வேண்டும் என்பதற்காக பிற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம். தெறி படத்தின் பெரும்பகுதி கேரளாவில் நடப்பது போல அமைக்கப்பட்டது. இப்போது நடித்துக்கொண்டிருக்கும் பரதன் படமும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டதாம். முக்கிய நடிகர்களிலேயே பாதி பேர் மலையாள நடிகர்கள்தான்.
மலையாளத்தின் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தமிழ்நாட்டில் ஓடுவதுபோல மலையாளத்தில் தமிழ் மசாலா படங்கள் சக்கை போடு போடுகின்றன. இதுதான் தளபதியின் மாஸ்டர் ப்ளானுக்கு காரணம்.