Don't Miss!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்- ரமேஷ் அரவிந்த் உருக்கம்
சென்னை: கமலஹாசன் ஹீரோவாக நடிக்கும், உத்தமவில்லன் திரைப்படத்தில் பாலச்சந்தர் சிறு வேடத்தில் நடித்துள்ளதாகவும், தன்னை நடிகனாக்கிய பாலச்சந்தர் கடைசியாக நடித்த படத்தை தான் இயக்குவதில் பெருமிதம் அடைந்துள்ளதாகவும் கூறுகிறார் ரமேஷ் அரவிந்த்.
இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளதாவது: கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தமவில்லன்' திரைப்படத்தை நான் இயக்குகிறேன். அதில் என்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த பாலச்சந்தரை சிறு வேடத்தில் நடிக்க அழைத்தேன். அவரும் ஆறு நாட்கள் பெங்களூருவில் தங்கி படத்தில் நடித்துக் கொடுத்தார்.
அவருக்கு அளித்த வசனங்களை எடிட் செய்து கூர்தீட்டினார். என்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த பாலச்சந்தர் நடித்த கடைசி திரைப்படத்தை இயக்கினேன் என்கிற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. உத்தமவில்லன் திரைப்படத்தை பாலச்சந்தருக்கே அர்ப்பணிக்க உள்ளேன்.
சினிமாவில் ஏதேனும் ஒரு பிரிவில் திறமைசாலிகளாக இருக்கும் இயக்குநர்கள் உண்டு. ஆனால் வசனம், கேமரா கோணம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலுமே திறமையானவர் என்றால் அது பாலச்சந்தர்தான். அனைத்து மொழி இயக்குநர்களுமே தெரிந்தோ, தெரியாமலோ அவரால் உந்தப்பட்டவர்கள்தான்.
பாலச்சந்தர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் வந்தாலே அங்கு பிற கலைஞர்களிடமும் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ளும். அவரை பார்க்க வெள்ளை உடை உடுத்திய சிங்கம் போலவே இருக்கும்.
சுந்தர ஸ்வப்னகலு, மனதில் உறுதி வேண்டும், ருத்ரவீணா என முறையே, கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்து என்னை அறிமுகம் செய்தவர் கே.பி.சார்தான். இவ்வாறு ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.