Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
திரைத் துறைக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும்!- பிரபல தயாரிப்பாளர்
திரைத்துறை மிக கடினமான சூழலில் உள்ள நிலையில், சிறு படங்களுக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும் என்றார் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்.
தயாரிப்பாளர் சங்கம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமா விளம்பரங்கள் குறித்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி படங்களை வாங்கும் தொலைக்காட்சிக்கு மட்டுமே விளம்பரங்கள், அதுவும் குறிப்பிட்ட தொகைக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி படங்களை வாங்காத சேனல்களுக்கு விளம்பரங்கள் முற்றிலும் கிடையாது என்றும், திரைப்பட நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பில்லை என்றும் கூறியுள்ளது.
நாளை மறுநாள் முதல் இதனை அமலுக்குக் கொண்டு வரவிருக்கிறார்கள்.
இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் (ஜேஎஸ்கே), தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் தருவதை விட இணையதளங்களுக்கு முக்கியத்துவம் தரப் போவதாகக் கூறினார்.
அவர் கூறுகையில், "இனி என் படங்களின் விளம்பரங்களை இணையதளங்கள் மூலமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். தயாரிப்பாளர் சங்கத்தின் வழிகாட்டுதல்படி இந்த விளம்பரங்களைத் தரவிருக்கிறேன்.
வரும் 24- ம் தேதி வெளியாகவிருக்கும் எனது படமான நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் இணையதளங்கள் மூலம்தான் உலகம் முழுக்க தெரிந்திருக்கிறது. இதனை நானே அனுபவத்தில் உணர்ந்தேன். அதனால் இந்தப் படத்திலிருந்து இணைய தளங்கள் மூலம் விளம்பரம் தரவிருக்கிறேன். இதன் மூலம் நல்ல பப்ளிசிட்டியும் கிடைக்கும், செலவும் குறையும்.
எனவே இனி என் போன்ற தயாரிப்பாளர்களுக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும்," என்றார்.