Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நிறைய லவ்... சின்ன ஆக்ஷன்... அந்த ஆக்ஷனும் அன்புக்காக!
சென்னை: எங்கேயும், எப்போதும் படப்புகழ் சரவணனின் அடுத்த படமான வலியவன், காதல் கலந்த ஆக்ஷன் கதையாம்.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களுக்குப் பிறகு இயக்குனர் சரவணன் எடுத்து வரும் படம், வலியவன். இப்படத்தில் ஜெய், ஆண்ட்ரியா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல்களும், கிளைமாக்ஸும் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.
அதிலும், குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம் 2015 காதலர் தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்யின் கதாபாத்திரம்...
இப்படத்தில் ஜெய், மால் ஒன்றில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்வாகவும், ஆண்ட்ரியா பேங்கில் வேலை பார்ப்பவராகவும் நடித்துள்ளனராம்.
காதலன் தான் வலியவன்...
வலியவன் குறித்து சரவணன் கூறுகையில், ‘இதில் காதலன் தான் வலியவன். நிறைய லவ், சின்ன ஆக்ஷன். அந்த ஆக்ஷனே அன்புக்காகத் தான்.
எமோஷனல் போர்ஷன்...
காதல் ஆக்ஷனை மீறி இதுல இன்னொரு விஷயத்தையும் உயர்த்திப் பிடிச்சிருக்கோம். அது தான் கதையோட எமோஷனல் போர்ஷன்.
ஹைலைட்...
அதைப் பார்க்கும் போது, ‘இந்த மாதிரி விஷயம் தானே இன்னைக்கு மனுஷனோட வாழ்க்கையை மாத்திடுது'னு உங்களுக்குத் தோணும். அதுதான் படத்தோட ஹைலைட்.
கதையோடு கனெக்ட்...
படம் பார்க்குறவங்கள்ல 90 சதவீதம் பேர், ‘ஆமாம்ல... நமக்கும் இப்படி ஒண்ணு நடந்துச்சுல்ல'னு கதையோட அவங்களைக் கனெக்ட் பண்ண வைப்பான் வலியவன்' எனத் தெரிவித்துள்ளார்.
சமூக அக்கறைக் கருத்துக்கள்...
வழக்கமாக சரவணன் படங்களில் இடம் பிடிக்கும் சமூக அக்கறை கொண்ட விஷயங்கள் இப்படத்திலும் உள்ளது என படக்குழுவினர் கூறுகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
80 நாள் வேலை
இந்தப் படத்தை 80- நாட்களில் முடிக்க திட்டமிட்டனராம். இதில் 65 நாள் வேலை முடிந்து விட்டதாம். இன்னும் 15 நாள் வேலை பாக்கி இருக்காம்.
இந்தியாவுக்குள்ளேயே பாடல்கள்...
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் இந்தியாவுக்குள்ளேயே எடுக்க திட்டமிட்டுள்ளனராம்.