Don't Miss!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மெரினா பெண் புரட்சியாளர்களுக்காக டாய்லெட்டுடன் கூடிய கேரவன்களை அனுப்பிய ராகவா லாரன்ஸ்
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் போராடி வரும் பெண்களுக்காக கழிவறையுடன் கூடிய 5 கேரவன்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், மாணவ-மாணவிகள் தொடர் புரட்சி செய்து வருகிறார்கள். இரவும், பகலும் மெரினாவில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடக்கும் வரை ஓயப் போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ்
மெரினா கடற்கரைக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ் புரட்சியாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். மேலும் புரட்சியாளர்களின் உணவு, மருந்து செலவுக்காக ரூ. 1 கோடி அளிப்பதாக அறிவித்தார்.
பெண்கள்
மெரினாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்டப்படுவதை ராகவா லாரன்ஸ் உணர்ந்தார். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
கேரவன்கள்
கழிவறைகளுடன் கூடிய 5 கேரவன்களை ராகவா லாரன்ஸ் இன்று காலை மெரினா கடற்கரைக்கு அனுப்பி வைத்தார். கேரவன்களுடன் சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் அங்கு வந்து அவற்றை ராகவா லாரன்ஸ் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.
நடிகைகள்
மெரினா கடற்கைரைக்கு வந்தபோது பெண்கள் படும் பாட்டை பார்த்த ராகவா லாரன்ஸ் சிவலிங்கா படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த 5 கேரவன்களை அனுப்பி வைத்துள்ளார் என்று தயாரிப்பாளர் தெரிவித்தார். தக்க சமயத்தில் உதவி செய்த ராகவா லாரன்ஸை புரட்சியாளர்களுடன் சேர்ந்து நாமும் பாராட்டுவோம்.