Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜேம்ஸ்பாண்ட் படத்தில் 'எப்'க்கும் கட்.. லிப்புக்கும் கட்: இந்திய சென்சார் போர்டு அதிரடி
மும்பை: ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்பெக்டருக்கு இந்திய சென்சார் போர்டு யூ/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. மேலும், பாண்ட் கொடுக்கும் உதட்டு முத்த காட்சிகளின் அளவை குறைத்து வெட்டி வீசியுள்ளது. இது காங்கிரஸ் மற்றும் கருத்துரிமைவாதிகளிடமிருந்து எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
ஜேம்ஸ்பாண்ட் வரிசை திரைப்படங்களில் தற்போது வெளியாகி சக்கைபோடு போட்டுவரும் திரைப்படம் ஸ்பெக்டர். உலகமெங்கும் வெற்றிநடைபோட்ட இப்படம் வரும் வெள்ளிக்கிழமை, இந்தியாவில் ரிலீசாகிறது.
இப்படத்துக்கு இந்திய சென்சார் வாரியம், யூ/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளோடுதான் சர்டிபிகேட் தரப்பட்டுள்ளது.
படத்தில் இடம்பெற்ற 4 முத்த காட்சிகள், 2 வசனங்கள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளனவாம். அந்த கட் செய்யப்பட்ட காட்சிகளில், ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடிக்கும், டேனியல் கிரேக், நடிகைகளுக்கு நீண்ட நேரம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்திருந்தாராம்.
முத்த காட்சியை மொத்தமாக நீக்க கோராத, சென்சார் போர்டு, தேவையில்லாமல் நீண்ட நேரமாக, அவர் வாய் விளையாட்டு காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது. எனவே, முத்தக்காட்சிகளின் நீளத்தில் சுமார் 50 சதவீதம் கட் செய்யப்பட்டுள்ளதாம்.
அதேபோல, ஆங்கிலத்தில் 'எப்' என்ற வார்த்தையில் தொடங்கும், வசனங்களும், 'ஏ' என்ற வார்த்தையில் தொடங்கி ஹோல் என்ற வார்த்தையில் முடியும், கட் செய்யப்பட்டுள்ளனவாம்.
இதனிடையே, சென்சார் வாரியம், இந்துமயமாகிவிட்டதாக கருத்துரிமைவாதிகள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகிறார்கள்.
எழுத்தாளரும், இயக்குநருமான, ஷ்ரிஷ் குண்டர் கூறுகையில், "ஜேம்ஸ்பாண்ட் உலகை காப்பாற்றுவார். ஆனால் ஜேம்ஸ்பாண்டை இந்திய சென்சார் போர்டிடம் இருந்து காப்பாற்றமுடியவில்லை" என்று கூறியுள்ளார்.