Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விஜய்யுடன் கைகோர்க்கும் ஜெயம்ரவி
சென்னை: இது என்ன மாயம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய்யின் அடுத்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஜெயம் ரவி தற்போது நாய்கள் ஜாக்கிரதை பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் மிருதன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் விஜய்யின் அடுத்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மதிப்பு திரையுலகில் அதிகமாகி இருக்கிறது. மேலும் ரவியும் இந்த வெற்றியைத் தக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் விஜய் தனது அடுத்த நாயகனாக ஜெயம் ரவியைத் தேர்வு செய்திருக்கிறார். முழுக்கதையையும் கேட்ட ரவி படத்தில் நடிக்க உடனே சம்மதம் சொல்லி விட்டாராம்.
இந்தப் படத்தின் தலைப்பு லெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்ற ரீதியில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.
ஜெயம் ரவி சம்மதத்தால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் அடுத்தடுத்த வேலைகளில் உடனடியாக இறங்கியிருக்கிறார். விரைவில் இது தொடர்பான முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகின்றனர்.