Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
2 ஆண்டு காதல், 32 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்திய நடிகை ஜெயசுதா, நிதின்
மும்பை: நிதின் கபூரும், நடிகை ஜெயசுதாவும் 2 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
நடிகை ஜெயசுதாவின் கணவரும், தயாரிப்பாளருமான நிதின் கபூர் மும்பையில் உள்ள தனது அலுவலகத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நிதின் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினர் ஆவார்.
காதல்
ஜெயசுதாவும், நிதின் கபூரும் இரண்டு ஆண்டுகள் காதலித்தனர். அதன் பிறகு கடந்த 1985ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நிஹார் மற்றும் ஸ்ரேயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெயசுதா
முன்னதாக நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயசுதா கூறுகையில், நிதினை பார்த்த நாளே அவரது அழகு என்னை கவர்ந்தது. அவர் பேசும் விதம் பிடித்திருந்தது. ஆனால் இது கண்டதும் காதல் இல்லை என்றார்.
நிதின்
ஜெயசுதா பற்றி நிதின் முன்பு கூறியதாவது, நானும், அவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் ஸ்பார்க் எல்லாம் இல்லை. ஆனால் நாங்கள் மும்பை மற்றும் சென்னைக்கு இடையே பயணம் செய்யத் துவங்கியபோது தான் ஒருவரையொருவர் மிஸ் செய்ததை உணர்ந்தோம் என்றார்.
மரணம்
நிதின் கபூரின் மரணத்தால் பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிதினை இழந்து வாடும் ஜெயசுதா மற்றும் மகன்களுக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.