Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'எத்தனை முறைடா ஒரு பொண்ணுக்கு தாலி கட்டுவீங்க?' - விஷாலைக் கலாய்த்த ஜேகே ரித்தீஷ்
சென்னை: ஏற்கெனவே அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்ட நடிகர் சங்க கட்டடத்துக்கு மீண்டும் அடிக்கல் நாட்டு விழா எதற்காக?, என்று நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் கேள்வி எழுப்பினார்.
நடிகர் சங்கத்தில் நிர்வாக மாற்றம் வர முக்கிய காரணமாக இருந்தவர் ஜேகே ரித்தீஷ். விஷால் அணிக்கு பக்க பலமாக இருந்து அவர்களை ஜெயிக்க வைத்தவர் ரித்தீஷ்தான். ஆனால் வென்ற பிறகு விஷால் அணியின் போக்கு பிடிக்காததால் அவர்களை விட்டு விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
இப்போது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கலைப்புலி தாணு ஆதரவு பெற்ற ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்.
நேற்று பிரசாத் லேபில் நடந்த ராதாகிருஷ்ணன் அணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜேகே ரித்தீஷ் பேசுகையில், "சென்ற வருடம் மார்ச் 5 ம் தேதி நாசருக்கும் எனக்கும் பிறந்தநாள். அன்றைக்கு விஷால் என்ன நினைத்தாறோ. ஆளுக்கு ஒரு கல்கொடுத்து நட்டு வைக்க சொன்னார். நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அது.
திடீரென்று தன் பதவிக்காக ஒரு பல்டி அடித்து மீண்டும் மார்ச் 31 அன்று அடிக்கல் நாட்டு விழா என்கிறார். இவ்ளோ அவசரம் ஏன் அவருக்கு?
விஷால் எங்களுக்குப் போட்டியே இல்லை.அவருக்கு வாக்குகளே இல்லை. எங்களுக்குப் போட்டி அண்ணன் கேயார் அணி மட்டும்தான். எங்கள் வெற்றி விழாவுக்கு வேண்டுமானால் விஷால் வரட்டும்," என்றார்.