Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரசிகர்களுக்காக நேரம் காலம் பார்க்காத விஜய்... - இயக்குநர் ஜான் மகேந்திரன்
பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய்.
சச்சின் படப்பிடிப்பின் கடைசி நாள்... கோயம்பத்தூர் விமான நிலையத்தில் அன்றைய படப்பிடிப்பு.
விஜய் இருப்பது தெரிந்து விமான நிலையம் வெளியே கல்லூரி மாணவிகளின் பெருங்கூட்டம். விஜய் கண்ணில் தென்ப்படும்போதெல்லாம் விஜய் என்று கத்தி மாணவிகள் ஆரவாரம்.
அன்றைய படப்பிடிப்பு முடிந்து, அன்று இரவு இருவரும் வெகு நேரம் பேசி கொண்டிருந்தோம். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு சென்னைக்கு விமானம். காலை நான்கு மணிக்கு எழ வேண்டும். நாங்கள் படுக்கும் போது சுமார் ஒன்னரை மணி இருக்கும்.
படுத்த சில நிமிடங்களில் அறையின் காலிங் பெல் அடிக்கும் சத்தம். திறந்தால், ஹோட்டல் மேனேஜர்.
எழுப்பியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, விஜயின் தீவிர ரசிகை ஒருவர் அவரை காண வந்திருப்பதாக கூற, இந்த நேரத்தில் எப்படி பார்க்க முடியும் என்று நான் கூற, அந்த ரசிகை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பதாகவும், ஷூட்டிங்கில் விஜயை பார்த்தாக தோழி சொன்னதை கேட்டு வந்ததாகவும் கூற...
என்னவாக இருந்தாலும் இந்த நேரத்தில் எப்படி பார்க்க முடியும் என்று கூறியபடி நான் ரேஷப்ஷனுக்கு வர,அங்கு அந்த பெண், கையில் ட்ரிப்ஸ் ஏறும் சிரின்ஜ் கையில் சொருகப்பட்ட நிலையில், அவள் தோழி சலைன் பாட்டிலை கையில் பிடித்தபடி நிற்பதை கண்டு ஷாக்.
தயங்கியபடி விஜய்யின், அறை காலிங் பெல்லை அடிக்க, திறந்த விஜயிடம் விஷயத்தை கூற, சற்றும் யோசிக்காமல் வெளியே வந்து, அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்து கொண்டு, அவர் நலம் விசாரித்து, அவரை பத்திரமாய் வழியனுப்பியும் வைத்தார்.
தன் மேல் அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு விஜய் நேரம் காலம் பார்ப்பதில்லை. இந்த பண்பு அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்து செல்லும்.
(விஜய்யை பற்றி சச்சின் இயக்குனர் ஜான் மகேந்திரனின் முகநூலில் இருந்து...)