Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாங்க, சினிமாவில லாபம் பார்க்கும் வழிகளை நான் இலவசமாவே சொல்லித் தரேன்! - ஜேஎஸ்கே அதிரடி
இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் வெறும் பட ரிலீஸில் மட்டும் காசு பார்த்தால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட காசு மிஞ்சாது. கடனாளியாகத் தான் தமிழ் சினிமாவை விட்டு வெளியேற வேண்டும்.
ஆனால் ஜேஎஸ்கே சொல்லும் கணக்கில் படத்தை வியாபாரம் செய்தால் ரிலீஸுக்கு முன்பே நல்ல லாபம் பார்த்து விடலாம்.
புதுமுகங்கள் நடிக்க யாகன் என்ற படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. நடிகை நமீதா, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, ஜே.சதீஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்த விழாவில்தான் ஆடியோ மூலம் எப்படி தயாரிப்பாளர்கள் நேரடியாக லாபம் பார்க்க முடியும் என்ற வழியை விளக்கினார் ஜே.எஸ்.கே.
"தங்க மீன்கள் படத்தின் ஆடியோவை குறைந்த விலைக்கு ஒரு கம்பெனிக்கு விற்றோம். ஆனந்த யாழை ஒரு பாடல் மூலம் மட்டுமே ஒண்ணே கால் கோடி ரூபாய் வருமானம் பார்த்தது அந்த கம்பெனி.
இதே போல் ரம்மியில் இடம்பெற்ற 'கூட மேல கூட வெச்சு...' பாடல் ரிங்டோன் மூலம் மட்டும் 80 லட்சம் லாபம் கிடைத்தது. இதுபோல பல வழிகள் வருமானம் பார்க்க இருக்கின்றன. தயாரிப்பாளர்கள் கேட்டால் எந்த நேரமும் ஆலோசனை சொல்லத் தயாராக இருக்கிறேன்," என்றார்.
சுரேஷ் காமாட்சி, நமீதா ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.