Don't Miss!
- News முன்னோடி தமிழ்நாடு.. நம்ம ஆட்சியில் இது முக்கியம்! பட்டியல் போட்ட முதல்வர்..வியந்து பார்த்த INDIA!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பாகுபலி 2 ஐ தமிழில் வெளியிடுபவர் யார் தெரியுமா?
உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.
இந்திய இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரமான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ்,நாசர், ரம்யா கிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தமிழ் நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளவர் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகத்தில் வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது.
பாகுபலி முதல் பாகத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டது நினைவிருக்கலாம்.
அத்துடன் கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகும் புதிய படம் 'மடைதிறந்து' ரிலீசுக்கு தயாராகிறது. இதே படம் தெலுங்கில் 1945 என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.
பாகுபலி - 2, மடைதிறந்து, 1945 என்று பிக பிரமாண்டமான படங்களின் மூலம் திரைத்துறைக்கு வந்திருக்கும் கே.புரொடக்ஷன்ஸ் இன்னும் பல புதிய படங்களை தயாரிக்க உள்ளது.
"பாகுபலி, பாகுபலி - 2 இரண்டு படங்களையும் மிக பிரமாண்டமாக தயாரித்ததின் மூலம் இந்திய சினிமாவை உலக அளவில் பேசவைத்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் ஷோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி , இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்கிறார் தயாரிப்பளர் எஸ்.என். ராஜராஜன்.
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!