Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'கனா காணும் காலங்கள்' 'காதல் சொல்ல வந்தேன்' பாலாஜிக்கு டும் டும் டும்!
சென்னை: தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான பாலாஜி- பிரீத்தி திருமணம் இன்று நடைபெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் பாலாஜி. பள்ளி மாணவர்களின் பதின்ம வயதுகளை எடுத்துக் கூறிய இந்த நாடகம் இளைய தலைமுறையிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து பட்டாளம் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் பாலாஜி அறிமுகமானார். தனி ஹீரோவாக பாலாஜி நடித்து வெளியான படம் காதல் சொல்ல வந்தேன்.
இதில் தன்னைவிட வயது அதிகமான பெண்ணை காதலிக்கும் மாணவராக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
இதனால் சோலோ ஹீரோவாக இல்லாமல் ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் பிரீத்தி என்ற பெண்ணைக் கரம்பிடித்து பாலாஜி மண வாழ்க்கையில் நுழைந்திருக்கிறார்.
Kaadhal Solla Vandhen & Kana Kaanum Kaalangal fame actor #Balaji ties knot to #Preethi this morning pic.twitter.com/EI61R1EWxg
— Tamil Movies (@tamil_films) June 9, 2016
பிரீத்தி-பாலாஜி திருமணம் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று விமரிசையாக நடைபெற்றது.இதுகுறித்து அவர் ''இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன்.
உங்கள் வாழ்த்து மற்றும் ஆசீர்வாதங்களுடன் எனது மண வாழ்க்கையைத் துவங்குகிறேன்'' என்று கூறியிருக்கிறார்.
வாழ்க பல்லாண்டு!