Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ஸ்டார் ஹோட்டலில் சமரசம்... சூர்யா விவகாரம் கடைசில காக்கா முட்டை கதையாகிடுச்சே!
சென்னை: நடுரோட்டில் தன்னை அடித்துவிட்டதாக நடிகர் சூர்யா மீது இளைஞர் போலீசில் புகார் கொடுத்துவிட்டு, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற்றார் அல்லவா... அவர் திரும்பப் பெற்றதன் பின்னணி இப்போது தெரிய வந்துள்ளது.
தான் யாரையும் அடிக்கவில்லை என்று சூர்யா விளக்கம் அளித்தாலும், தொடர்ந்து சூர்யா அடித்ததாகவும், அதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் அந்த இளைஞர் (பிரேம் குமார்) தொடர்ந்து கூறி வந்தார். இதில் லோக்கல் பிரமுகர்கள் தலையீடு அதிகரித்ததால் போலீசாரும் புகார் மனுவை ஏற்று ரசீது கொடுத்திருந்தனர்.
சூர்யா நேரில் வர வேண்டும். அவர் வரும் வரை விடமாட்டேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார் பிரேம் குமார்.
இந்த நிலையில்தான் திடீரென நேற்று மாலை புகாரை வாபஸ் பெறுவதாக போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார். இதன் பின்னணியில் ஒரு சமரசப் பேச்சு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இளைஞர் பிரேம் குமாரை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்த சூர்யாவின் தந்தை சிவகுமார், வக்கீல் முன்னிலையில் சமரசப் பேச்சு நடத்தினாராம். அதன் பிறகே பிரேம்குமார் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டாராம்.
கடைசியில் காக்கா முட்டை கதையாகிடுச்சே!