Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கமலுக்கு கால் சீக்கிரம் சரியாகணும்.. ரயில்வே ஸ்டேசனுக்கு ‘வீல் சேர்’ வாங்கிக் கொடுத்த ரசிகர்கள்
கிருஷ்ணகிரி: நடிகர் கமலின் கால் முறிவு சீக்கிரம் குணமாகி அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான வேண்டுதலுடன், கிருஷ்ணகிரி கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் கிருஷ்ணகிரி ரயில் நிலையத்திற்கு ஒரு சக்கர நாற்காலியை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.
தற்போது சபாஷ் நாயுடு படத்தை இயக்கி, நடித்து வருகிறார் கமல். இப்படத்தில் அவரது இரண்டு மகள்களும் அவருடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கமல், எதிர்பாராத விதமாக ஆழ்வார்பேட்டை இல்ல மாடிப்படிகளில் தவறி விழுந்தார்.
எலும்பு முறிவு...
இதனால், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு அறுவைச் சிகிச்சையும் நடைபெற்றது.
ஒத்தி வைப்பு...
அதனைத் தொடர்ந்து தற்போது தனது இல்லத்தில் அவர் ஓய்வில் இருக்கிறார். ஒரு மாதம் டாக்டர்கள் ஓய்விலிருக்க வலியுறுத்தியதால், இம்மாதம் தொடங்கப்பட வேண்டிய சபாஷ் நாயுடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை...
இந்நிலையில், கமலின் கால் விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் தீவிர பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கிருஷ்ணகிரி கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் வித்தியாசமாக வேண்டுதல் செய்துள்ளனர்.
சக்கர நாற்காலி...
அதாவது கமல் விரைவில் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அவர்கள், கிருஷ்ணகிரி ரயில் நிலையத்திற்கு ஒரு சக்கர நாற்காலியை அன்பளிப்பாக அளித்துள்ளனர். இது ரயில் நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர்களது கருத்து.