Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘கமல்ஹாசன் நன்றி இல்லாதவர்.. ஆனால் அவர் மீது கோபமில்லை!’ - சரத்குமார்
கமல் ஹாஸனின் பல பிரச்சினைகளை நான்தான் முன் நின்று தீர்த்து வைத்திருக்கிறேன். அவர் நன்றி இல்லாதவர் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு, என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.
நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை மூத்த நடிகரான கமல் ஹாஸன் எடுத்திருப்பது குறித்து சரத்குமார் கூறுகையில், "விஸ்வரூபம்', ‘உத்தம வில்லன்' ஆகிய 2 படங்களின் பிரச்சினைகளின் போதும், நான் தொடர்ந்து 36 மணி நேரம் தூங்காமல் விழித்திருந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர உதவினேன். அப்போது கமல்ஹாசனை நான் நேரில் கூட பார்க்கவில்லை. அலைப்பேசியில்தான் அவருடன் பேசினேன்.
ஸ்ருதிஹாசனுக்கு ஆந்திராவில் ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, அவர் மீதான புகாரை வாபஸ் வாங்குவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வைத்தேன். அதற்கு ஒரு நன்றி கூட அவர் சொல்லவில்லையே.
இப்படி நன்றி இல்லாமல் போய்விட்டாரே என்ற ஆதங்கம்தான் எனக்கு. ஆனால் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை. எதற்காக நான் கோபப்பட வேண்டும். அது அவர் விருப்பம்," என்றார்.